29 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


இருளைப்புரையு நிறத்திலரக்கன் றனையீ டழிவித்து
அருளைச்செய்யு மம்மானேரா ரந்தண் கந்தத்தின்
மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார் திரைக்கையாற்
றரளத்தோடு பவளமீனுஞ் சண்பை நகராரே.

                    -திருஞானசம்பந்தர்  (1-66-8)


பொருள்: நல்ல  மணத்தோடு மருள்  பண்ணை வண்டுகள் பாட, கடல் மலை போன்ற அலைக் கைகளால் முத்துக்களையும் பவளங்களையும் கொணர்ந்து சேர்க்கும் சண்பைநகர் இறைவன் இருள் போன்ற கரியநிறத்தினன் ஆகிய இராவணனின் வீரத்தை அழித்து அவன் உணர்ந்து வருந்த அருள் செய்த தலைவன்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...