21 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


காலையிற் கதிர்செய் மேனி கங்குலிற் கறுத்த கண்டர்
மாலையில் மதியஞ் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும்
ஆலையிற் பாகும் போல வண்ணித்திட் டடியார்க் கென்றும்
வேலையி னமுதர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

                       -திருநாவுக்கரசர்  (4-64-2)


பொருள்: காலை கதிரவனின்  ஒளியை உடைய திருமேனியராய் , இருள் போலக் கறுத்த கழுத்தினராய் , மாலையில் தோன்றும் பிறையணிந்த சடை முடியினராய் , தேனும் பாலும் கரும்பின் பாகும் கடலில் தோன்றும் அமுதமும் போல அடியவர்களுக்கு இனிப்பை நல்குபவராய் வீழிமிழலையில் உள்ள விகிர்தனார் விளங்குகிறார் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...