30 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மின்னிடை மடவார் கூற
மிக்கசீர்க் கலய னார்தாம்
மன்னிய பெருஞ்செல் வத்து
வளமலி சிறப்பை நோக்கி
என்னையும் ஆளுந் தன்மைத்
தெந்தைஎம் பெருமான் ஈசன்
தன்னருள் இருந்த வண்ணம்
என்றுகை தலைமேற் கொண்டார்.
 
                    -குங்கலிகலயநாயனார்  (20)

 

பொருள்: அம்மையார் இவ்வாறு கூறலும், மிக்க சிறப்பையுடைய குங்குலியக் கலயனாரும், தமது மனையில், விளங்கிய பெருஞ் செல்வத்தின் வளம் மலிந்த சிறப்பை நோக்கி,  என்னையும் ஆண்டு கொள்ளும் தன்மைக்கு, எந்தையும் எம் பெருமானுமான ஈசனின் அருள் இருந்த வண்ணம் தான் என்னே? என இறைவனின் அருளை நினைந்து களி கூர்ந்து நிற்பார், தம் கரங்களை உச்சிமீது கூப்பிய நிலையில் நின்று போற்றினார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...