17 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அன்பரங் கிருப்ப நம்பர்
அருளினால் அளகை வேந்தன்
தன்பெரு நிதியந் தூர்த்துத்
தரணிமேல் நெருங்க எங்கும்
பொன்பயில் குவையும் நெல்லும்
பொருவில்பல் வளனும் பொங்க
மன்பெரும் செல்வ மாக்கி
வைத்தனன் மனையில் நீட.
 
                          -குங்குலிகலய நாயனார்  (14)

 

பொருள்: பெருமானின் திருவருளினாலே அளகை வேந்தனாகிய குபேரன், தன்பெருநிதியைத் தனதுலகில் முழுவதும் இல்லையாகச் செய்து இந்நிலவுலகில் நெருங்குமாறு, பொற்குவியலும் நெல்லும் ஒப்பற்ற பிற பொருள்களாலான பல வளங்களும் பெருகிப் பொலியுமாறு, அவர்தம் திருமனையில் நிரப்பி வைத்தனன்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...