08 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

படையெ லாம்பக டாரஆளிலும்
பௌவஞ் சூழ்ந்தர சாளிலும்
கடையெ லாம்பிணைத் தேரை வால்கவ
லாதெ ழுமட நெஞ்சமே
மடையெ லாங்கழு நீர்ம லர்ந்து
மருங்கெ லாங்கரும் பாடத்தேன்
புடையெ லாமணம் நாறு சோலைப்
புறம்ப யந்தொழப் போதுமே.
 
                     - சுந்தரர் (7-35-5)

 

பொருள்: பல படைகளையும் ஏவல்கொண்டு வெற்றியைப் பெறினும் , அவ்வெற்றியாலே கடல்சூழ்ந்த நிலம் முழுவதையும் ஆளினும் , முடிவில் எல்லாம் , தேரையோடு ஒட்டியுள்ள வால்போல ஆகிவிடும் ; ஆதலால் , நீர்மடைகளில் எல்லாம் கழுநீர்ப் பூக்கள் மலர் தலாலும் , பல இடங்களிலும் கரும்பை ஆலையில் இட்டுப் பிழிதலாலும் , எல்லாப் பக்கங்களிலும் தேனின் மணம் வீசுகின்ற சோலை களையுடைய திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ;  புறப்படு மனமே  .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...