23 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொந்தண வும்பொழிற் சோலைக்
கூங்குயி லேயிது கேள்நீ
அந்தண னாகிவந் திங்கே
அழகிய சேவடி காட்டி
எந்தம ராம்இவன் என்றிங்
கென்னையும் ஆட்கொண் டருளும்
செந்தழல் போல்திரு மேனித்
தேவர் பிரான்வரக் கூவாய்.
 
                   -மாணிக்கவாசகர்  (8-18-10)
 
பொருள்: பூங்கொத்துக்கள் நெருங்கிய பெரிதாகிய சோலையில் கூவுகின்ற குயிலே! நீ இதனைக் கேட்பாயாக. இங்கே அந்தணன் ஆகி வந்து அழகிய செம்மையாகிய திருவடியைக் காட்டி, என் அன்பரில் ஒருவனாம் இவன் என்று இவ்விடத்தில் என்னையும் அடிமை கொண்டருளிய சிவந்த தீப்போலும் திருமேனியையுடைய தேவர் பெருமான் வரும்படி கூவி அழைப்பாயாக.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...