08 May 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்ப னென்னா தருளே துணையாக
ஒப்ப ரொப்பர் பெருமா னொளிவெண்ணீற்
றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே.
 
                  - திருஞானசம்பந்தர்  (1-28-1)

 

பொருள்: நெஞ்சே, சிற்றின்பத்தைத் தன் முனைப்போடு துய்ப்பேன் என்னாது, அருளே துணையாக நுகர்வேன் என்று கூற, இறைவர் அதனை ஏற்பர். அத்தகைய பெருமானார், ஒளி பொருந்திய திருவெண்ணீறு அணிந்த மேனியராய்த் தலைவராய் விளங்கும், திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...