02 May 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தெள்ளுநீ றவன்நீ றென்னுடல் விரும்பும்
செவிஅவன் அறிவுநூல் கேட்கும்
மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் கண்கள்
விமானமே நோக்கிவெவ் வுயிர்க்கும்
கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வள்ளலே மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தனே என்னும்என் மனனே.
 
                        - கருவூர்த்தேவர் (9-10-4)

 

பொருள்: தெளிந்த  திருநீற்றை அணிந்த சிவபெருமான் அணியும் நீற்றினையே என் உடல் விரும்புகிறது. என் செவிகள் அவனை அறியும் அறிவைத்தரும் நூல்களையே கேட்கின்றன. என் வாய் அவனுடைய திருநாமத்தை மெதுவாக ஒலிக்கிறது. என்கண்கள் அவனுடைய விமானத்தை நோக்கியதால் என்னை வெப்பமாக மூச்சு விடச்செய்கின்றன. கிளிகள் பூஞ்சோலையிலே இனிமையாகப் பேசி மாம்பொழிலைநோக்கி ஆரவாரம் செய்யும் கீழ்க் கோட்டூரில் உறையும் வள்ளலே! மணியம்பலத்தில் நின்று கூத்துநிகழ்த்தும் வலிமையுடையவனே! என்று என்மனம் அவனை நினைக்கும் 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...