26 May 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தழைதவழ் மொழுப்பும் தவளநீற் றொளியும்
சங்கமும் சகடையின் முழக்கும்
குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும்
குண்டையும் குழாங்கொடு தோன்றும்
கிழைதவழ் கனகம் பொழியுநீர்ப் பழனங்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மழைதவழ் மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தர்தம் வாழ்வுபோன் றதுவே.
 
                - கருவூர் தேவர் (9-10-7)

 

பொருள்: வில்வம் வன்னி முதலிய தழைகள் பொருந்திய முடியும், வெள்ளிய திருநீற்றின் ஒளியும், சங்கு வளைகள், உடுக்கை இவற்றின் ஒலியும், காதணியை அணிந்த செவியும், குளிர்ந்த சடையின் திரட்சியும், எருதும், திரள்திரளாகத் தோன்றுகின்ற ஒளி வீசும் பொற்பொடிகளைத் தோற்றுவிக்கின்ற நீர் வளம் மிக்க வயல் களிலே ஆரவாரம் மிக்கிருக்கும் கீழ்க்கோட்டூரில் உள்ள, மேகங்கள் தன் மீது தவழுமாறு உயர்ந்த உயரத்தை உடைய மணிஅம்பலத்தில் நின்று ஆடும் வலிமைமிக்க சிவபெருமானுடைய செல்வங்களாகக் காணப்படுகின்றன.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...