16 May 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அறுகெடுப் பார்அய னும்மரியும்
அன்றிமற் றிந்திர னோடமரர்
நறுமுறு தேவர் கணங்க ளெல்லாம்
நம்மிற்பின் பல்ல தெடுக்க வொட்டோம்
செறிவுடை மும்மதில் எய்த வில்லி
திருவேகம் பன்செம்பொற் கோயில் பாடி
முறுவற்செவ் வாயினீர் முக்க ணப்பற்
காடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
 
             - மாணிக்கவாசகர் (8-9-5)
பொருள்: பிரமனும் திருமாலும் அறுகம்புல்லை எடுத்த லாகிய பணியைச் செய்வார்கள். அவர்களைத் தவிர ஏனையோராகிய இந்திரன் முதலிய வானுலகத்தவர்களும் முணுமுணுக்கின்ற தேவர் கணங்களும் நமக்குப் பின் அல்லாமல் அவ்வறுகினை எடுக்கவிட மாட்டோம். நெருங்கிய முப்புரத்தை எய்து அழித்த வில்லையுடைய வனாகிய திருவேகம்பனது செம்பொன்னாலாகிய கோயிலைப் பாடி நகையோடு கூடிய சிவந்த வாயினையுடையீர்! மூன்று கண்களை யுடைய எம்தந்தைக்குப் பூசிக் கொள்ளும் பொருட்டுப் பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...