07 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நீரணங் கசும்பு கழனிசூழ் களந்தை
நிறைபுகழ் ஆதித்தேச் சரத்து
நாரணன் பரவுந் திருவடி நிலைமேல்
நலமலி கலைபயில் கருவூர்
ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த
அமுதம்ஊ றியதமிழ் மாலை
ஏரணங் கிருநான் கிரண்டிவை வல்லோர்
இருள்கிழித் தெழுந்த சிந்தையரே.
 
             - கருவூர் தேவர் (9-9-10)

 

பொருள்: நீரினது அழகிய ஊறுதலையுடைய ஆதித்தேச்சரம் என்ற கோயிலே, பற்றிய, திருமால் பரவும் பாதுகைகளை உடைய சிவபெருமான் மீது பல சிறப்புக்களும் பொருந்திய கலைகளில் பயின்ற கருவூர்த்தேவர் வேதங்களை ஓதிய தம் பவளம் போன்ற வாயிலிருந்து அமுதம்மாகிய  தமிழ் மாலையாகிய அழகு பொருந்திய இப்பத்துப் பாடல்களையும் வல்லவர் அறியாமையைக் கிழித்து அப்புறப்படுத்திய உள்ளத்தின ராவர்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...