18 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும்
சுழியமும் சூலமும் நீல
கண்டமும் குழையும் பவளவாய் இதழும்
கண்ணுதல் திலகமும் காட்டிக்
கெண்டையும் கயலும் உகளும்நீர்ப் பழனங்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வண்டறை மணியம் பலத்துள் நின்றாடும்
 மைந்தன்என் மனங்கலந் தானே.
 
                         - கருவூர் தேவர் (9-10-1)

 

 பொருள்: வெள்ளைப் பிறையையும், சடைமுடியையும், உச்சிக்கொண்டையையும், சூலத்தையும், நீலகண்டத்தையும், காதணியையும், பவளம் போன்ற வாயின் உதடுகளையும், நெற்றிக் கண்ணின்மேல் இடப்பட்ட திலகத்தையும் யான் காணச் செய்து,கெண்டையும் கயலும் தாவிக்குதிக்கின்ற நீர் வளம் பொருந்திய வயல்களின் மள்ளர்களால் ஒலிக்கப்படும் ஆரவார முடைய கீழ்க்கோட்டூரில் வண்டுகள் ஒலிக்கும் மணியம்பலத்துள் நின்று ஆடும் வலிமையை உடைய பெருமான் என் உள்ளத்தில் கலந்து ஒன்றுபட்டுவிட்டான்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...