15 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பத்தியா லேத்தி நின்று பணிபவர் நெஞ்சத் துள்ளார்
துத்தியைந் தலைய நாகஞ் சூழ்சடை முடிமேல் வைத்து
உத்தர மலையர் பாவை யுமையவ ணடுங்க வன்று
அத்தியி னுரிவை போர்த்தா ரதிகைவீ ரட்ட னாரே.
 
                          - திருநாவுக்கரசர் (4-25-5)

 

பொருள்: பத்தியோடு வணங்கும் மெய்யன்பர் சித்தத்தில் நிலையாக உள்ளவரும் , படப்பொறிகளை உடைய ஐந்தலை நாகத்தைப் பரந்த சடைமுடியின்மேல் சூடி , வடக்கிலுள்ள இமய மலையரசன் மகளான உமாதேவி நடுங்குமாறு யானைத் தோலைப் போர்த்தியவரும் அதிகை வீரட்டனாரே .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...