08 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காண்டலேகருத் தாய்நினைந்திருந் தேன்மனம்புகுந் தாய்க ழலடி
பூண்டுகொண் டொழிந்தேன் புறம்போயினா லறையோ
ஈண்டுமாடங்க ணீண்டமா ளிகை மேலெழுகொடி வானி ளம்மதி
தீண்டிவந் துலவுந் திருவாரூ ரம்மானே.
 
          - (திருநாவுக்கரசர் 4-20-1)

 

பொருள்: நெருங்கிய நீண்ட மாடங்கள் மாளிகைகள் மற்றும் அதன்  மேல் உயர்த்தப்பட்ட கொடிகள் வானத்திலுள்ள பிறையைத் தீண்டியவாறு வானத்தில் உலவும் திருவாரூரிலுள்ள பெருமானே ! உன்னைக் காண்பதனையே எண்ணமாகக் கொண்டு உன்னை விருப்புற்று நினைத்தவாறு இருந்த அடியேனுடைய உள்ளத்தில் நீ புகுந்தாயாக , உன் வீரக்கழல் அணிந்த திருவடிகளை என் மனத்திற்கு அணிகலனாக அணிந்து கொண்டிருக்கின்ற என்னை விடுத்துப் புறத்தே போக விடேன் . 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...