14 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும்
ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே.
 
            - திருமூலர் (10-1-35)

 

பொருள்: சிவபெருமானை  வாழ்த்த வல்லவரது மனத்தின் கண் ஒளியாயும், தூய்மையாயும், இன்பமாயும் விளங்குகின்ற சிவபெரு மானைத் துதித்தும்,  தலைவன் என்று வணங்கியும் உறவு கொண்டால், அவனது திருவருளைப் பெறலாம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...