01 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மாதி மணங்கம ழும்பொழில்
மணிமாட மாளிகை வீதிசூழ்
சோதி மதிலணி சாந்தைமெய்ச்
சுருதி விதிவழி யோர்தொழும்
ஆதி யமரர் புராணனாம்
அணிஆ வடுதுறை நம்பிநின்ற
நீதி யறிகிலள் பொன்னெடுந்
திண்டோள் புணர நினைக்குமே.
 
         - (9-6-2)

 

பொருள்: என் மகள் நறுமணம் கமழும் சோலைகளும், அழகிய மேல்மாடிகளை உடைய மாளிகைகளை உடைய வீதிகளும் சூழ்ந்துள்ள, ஒளிவீசும் மதில்களால் அழகு செய்யப்பட்டுள்ள சாத்தனூரில் உள்ள உண்மையான வேதநெறியில் வாழும் சான்றோர் கள் வணங்குகின்ற, ஏனைய தேவர்களுக்கு முற்பட்ட பழைமை யனாகிய, அழகிய ஆவடுதுறை என்ற கோயிலில் உகந்தருளி யிருக்கும் குணபூரணனாகிய எம்பெருமான் பெருமையை உள்ளவாறு அறியும் ஆற்றல் இலளாய் அவனுடைய பொன்நிறமுடைய நீண்ட வலிய தோள்களைத் தழுவநினைக்கின்றாள்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...