25 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

அவ்வழி அவர்க ளெல்லாம்
அஞ்சியே அகன்று நீங்கச்
செவ்விய நெறியில் தத்தன்
திருநகர் கடந்து போந்து
கைவடி நெடுவா ளேந்தி
ஆளுறாக் கானஞ் சேர
வெவ்வினைக் கொடியோன் தன்னை
விட்டபின் மீண்டு போந்தான்.
 
            - (மெய்ப்பொருள் நாயனார் புராணம்  19)

 

பொருள்: மன்னன்  ஆணையென்று கூறியதும் அவனைச் சூழ்ந்தவர்களெல்லாம் அஞ்சி அவ்விடத்தினின்றும் பெயர்ந்து செல்ல, செல்லுதற்குப் பாதுகாப்பாய வழியில் தத்தன் என்பான் அந்நகரத்தைக் கடந்து சென்று, கையிடத்துக் கூரிய நீண்ட வாளை ஏந்திய வண்ணம், மனிதர்கள் இயங்காத காட்டை அடைந்து தீத்தொழிலினனாய அக் கொடியவனை விடுத்து மீண்டு வந்தான்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...