22 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப்
புகழாள ராயிரம் பூசுரர்
மெய்யே திருப்பணி செய்சீர்
மிகுகா விரிக்கரை மேய
ஐயா திருவா வடுதுறை
யமுதேயென் றுன்னை யழைத்தக்கால்
மையார் தடங்கண் மடந்தைக்கொன்
றருளா தொழிவது மாதிமையே.

            - (9-6-1)

பொருள்: என்றும் தான் கூறுவது பொய்த்தல் இல்லாத வேதத்தை ஒதுபவராய்ச் சாத்தனூரில் வாழும் உண்மையான புகழாளராய், எண்ணிக்கையில் ஆயிரவராய் உள்ள நிலத்தேவராம் அந்தணர்கள் உள்ளம் ஒன்றித் திருத்தொண்டு செய்கின்ற, சிறப்பு மிகுகின்ற காவிரிக் கரையில் விரும்பி வீற்றிருக்கும் தலைவனே! திருவாவடுதுறையில் உகந்தருளியிருக்கும் அமுதமே! என்று என் மகள் உன்னை அழைத் தால் மைதீட்டிய பெரிய கண்களைஉடைய என்மகளுக்கு நீ ஒரு வார்த்தையும் மறுமாற்றமாகக் கூறாமல் இருப்பது உனக்குத் தகுதியோ? பெருமையோ? - என்று தாய் பெருமானிடம் முறையிட்டவாறு.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...