23 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு  திருமுறை

அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே.
 
          - திருமூலர் (10-1-32)

 

பொருள்: எல்லா உயிர்க்கும்  தந்தையும், நந்தி என்னும் நமமுடையவனும் ,  அமுதமாய் இனிப்பவனும், வள்ளல் பிறர் ஒருவரும் ஒப்பாகமாட்டாத பெருவள்ளலும், ஊழிகள் பல வற்றிலும் உலகிற்குத் தலைவனாய் நிற்பவனும் ஆகிய சிவபெரு மானை யாதொரு முறைமையிலானும் துதித்தால், அதற்கு  தக அவனது அருளைப் பெறலாம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...