09 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நெருப்புறு வெண்ணெயும் நீருறும்
உப்பு மெனஇங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல்
பொய்யன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரைவிண் ணோரின்
மிகுத்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்தில்லை
போலுந் திருநுதலே.

             -திருக்கோவையார் (8-22,2) 


பொருள்:  மிக்க விருப்புறுமவரை விண்ணோரினு மிகச் செய்து;பகைவர் மாய விதிர்க்கப்படுஞ் சூலவேலையுடையவனது தில்லையை யொக்குந் திருநுதால்!; பொருப்பைச்சேர்ந்த மயில்போல்வாய்;  தீயையுற்ற வெண்ணெயும் நீரையுற்றவுப்பும் போல; இவ்வாறுருகித் தனிமையுறாதொழி; அன்பர் போக்குப் பொய் அன்பர்போக்குப் பொய் என்றவாறு 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...