03 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நஞ்சும்அமு தாம்எங்கள்
நாதனடி யார்க்கென்று
வஞ்சமிகு நெஞ்சுடையார்
வஞ்சனையாம் படியறிந்தே
செஞ்சடையார் சீர்விளக்குந்
திறலுடையார் தீவிடத்தால்
வெஞ்சமணர் இடுவித்த
பாலடிசில் மிசைந்திருந்தார்.

               -திருநாவுக்கரசர் புராணம்  (104)


பொருள்: சிறந்த சடையையுடைய சிவபெருமானுடைய சீர்களை உலகத்தில் விளக்கும் ஆற்றலுடைய நாவரசர், வஞ்சனை மிகுந்த மனமுடைய சமணர்களின் வஞ்சனையால் அமைக்கப்பட்டது என்பதை அறிந்தே, `எம் இறைவனின் அடியவர்க்கு நஞ்சும் அமுத மாகும்` என்ற உறுதிப்பாடு உடையவராய், கொடிய சமணர்களால் கொடுக்கப்பெற்ற நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டு யாதொரு குறை பாடும் இல்லாது இருந்தார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...