22 October 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


புரமன் றயரப் பொருப்புவில்
லேந்திப்புத் தேளிர்நாப்பண்
சிரமன் றயனைச்செற் றோன்தில்லைச்
சிற்றம் பலமனையாள்
பரமன் றிரும்பனி பாரித்த
வாபரந் தெங்கும்வையஞ்
சரமன்றி வான்தரு மேலொக்கும்
மிக்க தமியருக்கே.

            -திருக்கோவையார் (8-23,6)


பொருள்:  புரம்வருந்த அன்று பொருப்பாகிய வில்லை யேந்தி;  அயனையன்று சிரமரிந்த வனது பெரியபனி வையமெங்கும் பரந்து துவலைகளைப் பரப்பியவாறு;  தில்லையிற் சிற்றம்பலத்தை யொப்பாளதளவன்று;  மிக்க தனிமையையுடையார்க்கு இப்பனி; அன்றி உயிர்கவர வெகுண்டு;  வான் சரத்தைத் தருமாயின்; ஒக்கும்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...