15 October 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தண்டமிழ் மாலைகள் பாடித்
தம்பெரு மான்சர ணாகக்
கொண்ட கருத்தில் இருந்து
குலாவிய அன்புறு கொள்கைத்
தொண்டரை முன்வல மாகச்
சூழ்ந்தெதிர் தாழ்ந்து நிலத்தில்
எண்டிசை யோர்களுங் காண
இறைஞ்சி எழுந்தது வேழம்.

               -திருநாவுக்கரசர் புராணம்  (117)


பொருள்: தமிழ் மாலைகளைப் பாடித் தம் இறை வரையே சரணாகக் கொண்ட கருத்துடன் இருந்து விளங்கிய அன்பு பொருந்திய கொள்கையுடைய திருத்தொண்டரை,  வலமா கச் சுற்றி வந்து, எதிரில் தாழ்ந்து, எல்லாத் திக்குகளில் உள்ள வரும் காணும்படி அவ்யானை நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து நின்றது.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...