24 September 2018

தினம் ஒரு திருமுறை


தினம்  ஒரு திருமுறை


ஆனந்த வெள்ளத்தின்
இடைமூழ்கி யம்பலவர்
தேனுந்து மலர்ப்பாதத்
தமுதுண்டு தெளிவெய்தி
ஊனந்தான் இலராகி
உவந்திருந்தார் தமைக்கண்டு
ஈனந்தங் கியதிலதாம்
என்னஅதி சயம்என்றார்.

            -திருநாவுக்கரசர் புராணம்  (101)


பொருள்: சிவானந்தப் பெருக்கினுள் மூழ்கி அம்பல வாணருடைய தேனைச் சொரியும் மலர் அனைய திருவடிகளின் அமுதத்தை உண்டு, தெளிவடைந்து, எவ்வகையான குறைபாடும் இல்லாதவராய், மகிழ்வுடன் வீற்றிருந்த திருநாவுக்கரசரைப் பார்த்து, `கெடுதி சிறிதும் அடைந்திலது! என்ன வியப்பு!` என்று சமணர் உரைத்தனர்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...