12 September 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நாமார்க்குங் குடியல்லோம்
என்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன்
குளிர்மதிவாழ் சடையானைத்
தேமாலைச் செந்தமிழின்
செழுந்திருத்தாண் டகம்பாடி
ஆமாறு நீரழைக்கும்
அடைவிலமென் றருள்செய்தார்.

                -திருநாவுக்கரசர் புராணம் (93)


பொருள்: நாமார்க்குங் குடியல்லோம் எனத் தொடங்கி, நான்மறையின் தலைவரும், கங்கையுடன் குளிர்ந்த பிறைச் சந்திரனும் வாழும் சடையையுடையவருமான சிவபெருமானை இனிய செந் தமிழின் மாலையாய செழுமையான திருத்தாண்டகத் திருப் பதிகத் தைப் பாடி, `உம் அரசனின் ஏவல் வழி, நீவிர் அழைக்கும் நிலையில் நாம் இல்லை!` என்று உரைத்தார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...