03 September 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


தலைநெறியா கியசமயந்
தன்னையழித் துன்னுடைய
நிலைநின்ற தொல்வரம்பில்
நெறியழித்த பொறியிலியை
அலைபுரிவாய் எனப்பரவி
வாயால்அஞ் சாதுரைத்தார்
கொலைபுரியா நிலைகொண்டு
பொய்யொழுகும் அமண்குண்டர்.

              -திருநாவுக்கரசர் புராணம்  (89)


பொருள்: கொல்லாமையை மேற்கொண்டவர்கள் எனக் கூறிக்கொண்டு ஒழுகும் பாவியர்களாய அச்சமணர்கள், `மேலாய நெறியாய சமண சமயத்தை அழித்து, அதனால், உன் ஆணையில் நின்ற பழைய ஒழுக்க நெறியையும் அழித்த அறிவற்ற அவரை வருத்துவாயாக' என்று வேண்டித் தம் வாயால் ஒரு சிறிதும் அஞ்சாது உரைத்தனர்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...