10 September 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மன்னவன் தெம்முனை மேற்செல்லு
மாயினும் மாலரியே
றன்னவன் தேர்புறத் தல்கல்செல்
லாது வரகுணனாந்
தென்னவ னேத்துசிற் றம்பலத்
தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூவலன் னாளுமற்
றோர்தெய்வ முன்னலளே.

              -திருக்கோவையார்  (8-19,8) 


பொருள்: மன்னவனது பகைமுனை மேலேவப்பட்டுப் போமாயினும்; பெரிய வரியேற்றை யொப்பா னூருந்தேர் தன்னிலை யினல்லது புறத்துத் தங்காது; வரகுணனாகிய தென்னவனாலேத்தப்படுஞ் சிற்றம்பலத்தின் கண்ணான்; தானல்லாத வரியயன்முதலாகிய தேவர்க்கெல்லாம் முன்னே யுள்ளான்; அவளது மூவலை யொப்பாளும் வேறொரு தெய்வத்தைத் தெய்வமாகக் கருதாள்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...