06 July 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பேராத பாசப்
பிணிப்பொழியப் பிஞ்ஞகன்பால்
ஆராத அன்புபெற
ஆதரித்த அம்மடவார்
நீராரும் கெடிலவட
நீள்கரையில் நீடுபெருஞ்
சீராரும் திருவதிகை
வீரட்டா னஞ்சேர்ந்தார்.

            -திருநாவுக்கரசர் புராணம்  (42)


பொருள்: பாசக் கட்டு நீங்குமாறு, சிவபெரு மானிடத்தே மீதூர்ந்த அன்பு கொண்ட திலகவாதியம்மையார் , புண்ணியத் தன்மை வாய்ந்த, திருக்கெடிலம் ஆற்றின் நீண்ட வடகரையில் அமைந்திருக்கும் நீடும் பெருஞ்சிறப்பு மிக்க திருவதிகை வீரட் டானத்தை அடைந்தார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...