04 July 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


நில்லா வளைநெஞ்சம் நெக்குரு
கும்நெடுங் கண்துயிலக்
கல்லா கதிர்முத்தங் காற்று
மெனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோ னருள்களில் லாரிற்சென்
றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே யிதுநின்னை
யான்இன் றிரக்கின்றதே.

             - திருக்கோவையார் (8-15,12) 


பொருள்: ஒளியார்ந்த மதியே;  தில்லைக்கணுளனாகிய தொல்லோனது அருளுடையா ரல்லாதாரைப்போலக் கண்ணோட்டமின்றிப் போனவர் போதலா லுண்டாகிய இன்னாமையை நீயேகண்டாய் யான் சொல்ல வேண்டுவதில்லை; வளைகணிறுத்த நிற்கின்றன வில்லை; நெஞ்சு நெகிழ்ந்துருகாநின்றது;  நெடுங்கண் கடுயிலாவாய்க் கண்ணீர்த்துளியாகிய கதிர் முத்தங்களை  அவர்க்குச் சொல்வாயாக; இது நின்னை யானின்றிரக் கின்றதிது என்றவாறு 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...