03 July 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


ஆசை பலஅறுக் கில்லேன்
ஆரையும் அன்றி யுரைப்பேன்
பேசிற் சழக்கலாற் பேசேன்
பிழைப்புடை யேன்மனந் தன்னால்
ஓசை பெரிதும் உகப்பேன்
ஒலிகடல் நஞ்சமு துண்ட
ஈசன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

              - சுந்தரர் (7-73-10)


பொருள்: எனக்கு உள்ள ஆசையை ஒன்றையும் நீக்கமாட்டேன் ; அவ்வவாவினால் யாவ ரிடத்தும் வெகுளிதோன்றுதலின் , எவரிடத்தும் பகைத்தே பேசுவேன் ; ஒன்று சொல்லின் , பொய்யல்லது சொல்லேன் ; எனினும் புகழை மிக விரும்புவேன் ; இவற்றால் மனத்தாலும் குற்றம் புரிதலுடையேன் . ஒலிக்கின்ற கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்ட பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...