07 February 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மறையோர் மொழியக் கேட்டஞ்சிச்
சிறுமா ணவகன் செய்தஇது
இறையும் நான்முன் பறிந்திலேன்
இதற்கு முன்பு புகுந்ததனை
நிறையும் பெருமை அந்தணர்காள்
பொறுக்க வேண்டும் நீங்களெனக்
குறைகொண் டிறைஞ்சி இனிப்புகுதில்
குற்றம் எனதே யாம்என்றான்.

                   -சண்டேசுவரநாயனார் புராணம்  (43) 


பொருள்: அவையோர் மொழிந்ததைக் கேட்ட எச்சதத் தனும், அஞ்சிப், `பெருமை மிக்க அவையோர்களே! என் சிறுபையன் செய்த தீங்கினை, ஒருசிறிதும் இதற்கு முன் அறிந்திலேன். இதற்கு முன்பு நடந்த இதனைப் பொறுக்க வேண்டும்` என்று குறை இரந்து வேண்டி, `இனி இச்செயல் நிகழுமாயின் குற்றம் என்னுடைய தேயாம்` என்றான்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...