22 February 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பரவ மேன்மேல் எழும்பரிவும்
பழைய பான்மை மிகும்பண்பும்
விரவ மேதக் கவர்தம்பால்
மேவும் பெருமை வெளிப்படுப்பான்
அரவம் மேவுஞ் சடைமுடியார்
அருளாம் என்ன அறிவழிந்து
குரவு மேவும் முதுமறையோன்
கோபம் மேவும் படிகண்டான்.

                  - சண்டேசுவரநாயனார் புராணம் (48) 


பொருள்: பெருமானைப் பரவுதற்கு மேன்மேலும் எழும் விருப்பும், முன்னைப் பிறப்பால் ஒருங்குவாய்ந்த வழிபாடாற்றும் பண்பும் பொருந்த, விசாரசருமர் தம்பால் கொண்ட அன்பின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில், பாம்பையணிகின்ற சடை முடியையுடைய சிவபெருமானின் அருளே இது என்னுமாறு, குராமரத்தின் மீது இருந்த முதிய எச்சதத்தனும், இவர் பூசையைக் கண்டு அறிவழிந்து சினம் மிகப் பார்த்தான்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...