27 February 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


யாழைப்பழித் தன்னமொழி
மங்கைஒரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை
வைத்தான்இடம் பேணில்
தாழைப்பொழி லூடேசென்று
பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங்
குண்ணும்மறைக் காடே

               - சுந்தரர் (7-71,1)


பொருள்: யாழின் இசையைப் பழித்த அத்தன்மையையுடைய சொற்களை உடைய மங்கையை ஒரு பாகத்தில் உடையவனும் , பேழை போலும் சடைமுடியில் பிறையைச் சூடினவனும் ஆகிய இறைவனது இடத்தை அறிந்து வழிபடவேண்டின் , அது , எளிய குரங்குகள் தாழம் புதரூடே புகுந்து , சிறிய புழைகளில் நுழைந்து , வாழைப்பழத்தைப் பறித்து உண்கின்ற திருமறைக்காடேயாகும் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...