28 February 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை 


பைந்நா ணரவன் படுகடல்
வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும்
புலியூர் மணந்தபொன்னிம்
மொய்ந்நாண் முதுதிரை வாயான்
அழுந்தினு மென்னின்முன்னும்
இந்நா ளிதுமது வார்குழ
லாட்கென்க ணின்னருளே.

               - திருக்கோவையார் (8-10,9)


பொருள்: பையையுடைய அரவாகிய நாணையுடையான்; ஒலிக்குங் கடலிடத்துப்பட்ட நஞ்சம் அமுதாகும் மை நாணு நீலமணி போலுங் கண்டத்தையுடையான்; அவன் மன்னும் புலியூரைப் பொருந்திய பொன் போல்வாள்; பெருமையையுடைய இம்முதியகடற்கண் யானழுந்தினேனாயினும் தான் என்னின் முற்பட்டழுந்தும்; இந்நாள் இது தேனையுடைய நெடிய குழலாட்கு என் கணுண்டாகிய இனிய அருள் இப்பொழுதித்தன்மைத்தாயிராநின்றது

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...