04 January 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


முத்தினை மணியைப் பொன்னை முழுமுதற் பவள மேய்க்கும்
கொத்தினை வயிர மாலைக் கொழுந்தினை யமரர் சூடும்
வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.

              -திருநாவுக்கரசர்  (4-74-1)


பொருள்: முத்து , மணி , பொன் , சிறந்த பவளக்கொத்து , வைரத்தின் இயல்பை உடைய ஒளி எனும் இவற்றை ஒத்தவனாய் , தேவர்கள் வழிபடும் வித்து , வேதவேள்வி , வேதம் எனும் இவையாக இருக்கும் தலைவனை , நினைத்த மனம் மிக அழகியதாக நினைத்தது உள்ளவாறு என்னே !

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...