17 January 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மெய்யே யிவற்கில்லை வேட்டையின்
மேன்மன மீட்டிவளும்
பொய்யே புனத்தினை காப்ப
திறைபுலி யூரனையாள்
மையேர் குவளைக்கண் வண்டினம்
வாழுஞ்செந் தாமரைவாய்
எய்யே மெனினுங் குடைந்தின்பத்
தேனுண் டெழிறருமே.

             - மாணிக்கவாசகர் (8-7,4) 

பொருள்: இறைவனது புலியூரையொப்பாளுடைய மையழகையுடைய குவளைபோலுங் கண்ணாகிய வண்டினம்; தான் வாழ்தற்குத் தகும் இவன் முகமாகிய செந்தாமரை மலர்க்கண்; எய்யேம் எனினும் யாமறியேமாயினும்; குடைந்து இன்பமாகிய தேனை யுண்டு;  இவற்கு மெய்யாகவே வேட்டையின் மேல் உள்ளமில்லைஇவளும் புனத்தினையைக் காப்பது பொய்யே என்றவாறு 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...