19 January 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தம்மை அணைந்த ஆன்முலைப்பால்
தாமே பொழியக் கண்டுவந்து
செம்மை நெறியே உறுமனத்தில்
திருமஞ் சனமாங் குறிப்புணர்ந்தே
எம்மை உடைய வள்ளலார்
எய்த நினைந்து தெளிந்ததனில்
மெய்ம்மைச் சிவனார் பூசனையை
விரும்பும் வேட்கை விளைந்தெழலும்.

                         -சண்டேசுவரநாயனார் புராணம்  (31)


பொருள்: தம்மை அணைந்த பசுக்கள் பாலைத் தாமே பொழிந்திடக் கண்டு, விசாரசருமர் உவந்து, செம்பொருளாய சிவ பெருமான் வழியே உற்ற தமது மனத்தில், இப்பால் எம்பெருமாற்குத் திருமுழுக்கிற்குத் தகும் என்னும் குறிப்பை உணர்ந்து, எம்மை உடைய வள்ளலார் அதன் பயனைத்தாம் அடைந்திட நினைந்து, தெளிந்து, அத னால் என்றும் உண்மைப் பொருளாய சிவபெருமானாரின் பூசனையை விரும்பிடும் வேட்கை உள்ளத்தில் தோன்றி எழலும்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...