02 January 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஓது கிடையின் உடன்போவார்
ஊர்ஆன் நிரையின் உடன்புக்க
போது மற்றங் கொருபுனிற்றா
போற்றும் அவன்மேன் மருப்போச்ச
யாது மொன்றுங் கூசாதே
யெடுத்த கோல்கொண் டவன்புடைப்ப
மீது சென்று மிகும்பரிவால்
வெகுண்டு விலக்கி மெய்யுணர்ந்து.


           -சண்டேசுவரநாயனார்  புராணம்  (17)


பொருள்: மறைகளை ஓதிவரும் , ஊரவரின் பசுக் கூட்டத்துடன் சென்ற பொழுது, ஈன்றணி மையையுடைய ஒரு பசு, தன்னை மேய்க்கும் இடையன்மேல் தன் கொம்பை அசைத்துச் செல்ல, அவ்வளவில் அவ்விடையன், யாதும் கூச்சம் இல்லாதவனாய்த், தான் கொண்டிருந்த தடி கொண்டு அப் பசுவை நைய அடித்திட, அதுகண்ட விசாரசருமர், அவனிடம் சென்று அப்பசுமேல் கொண்ட மிகுந்த அன்பால் இடையனைச் சினந்து, அவன் அப்பசுவை மேலும் அடிக்காதவாறு விலக்கி, தாம் உண்மையை உணர்ந்தவராய்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...