07 April 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற
மறையோனும் மாலும்மால் கொள்ளும் இறையோன்
பெருந்துறையுள் மேய பெருமான் பிரியா
திருந்துறையும் என்நெஞ்சத் தின்று.

                  -மாணிக்கவாசகர்  (8-47-5)


பொருள்: அறியப் புகுவார்க்குச் சொல்லளவேயாமோ?. பிரமனும் திருமாலும் அறியாது மயக்கத்தை அடைகின்ற இறைவனும் திருப்பெருந்துறையில் எழுந்தருளினவனும் ஆகிய சிவபிரான், இன்று என் மனத்தில் தங்கி வாழ்கின்றான்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...