12 April 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக் கென்றயலே
கயலார்தடங்க ணஞ்சொனல்லார் கண்டுயில் வவ்வுதியே
இயலானடாவி யின்பமெய்தி யிந்திரனாண் மண்மேல்
வியலார்முரச மோங்குசெம்மை வேணு புரத்தானே.

                            -திருஞானசம்பந்தர் (1-63-2)


பொருள்: இந்திரன் விண்ணுலகை இழந்து மண்ணுலகம் வந்து முறைப்படி ஆட்சி நடத்தி மகிழ்வெய்தி வழிபட்டு வாழ்ந்த சிறப்பினதும், பெரிதாய முரசுகள் ஓங்கி ஒலிப்பதும் நீதி நிலை பெற்றதும் ஆகிய வேணுபுரத்தில் எழுந்தருளிய இறைவனே, கங்கை தங்கிய சடைமுடியில் ஒரு திங்களைச் சூடி மகளிர்இடும் பலியை ஏற்பதற்கு என்றே வந்து அதனின் வேறாய் மீன் போன்ற தடங்கண்களையும் அழகிய சொற்களையும் உடைய இளம்பெண்களின் கண்கள் துயில் கொள்வதைக் கவர்ந்து அவர்களை விரகநோய்ப் படுத்தல் நீதியோ?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...