05 April 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


அரியொடு பூமிசை யானும்
ஆதியும் அறிகிலார்
வரிதரு பாம்பொடு வன்னி
திங்களும் மத்தமும்
புரிதரு புன்சடை வைத்த
எம்புனி தற்கினி
எரியன்றி அங்கைக்கொன் றில்லை
யோஎம் பிரானுக்கே.

                     -சுந்தரர்  (7-44-8)


பொருள்: திருமாலும் , பிரமனும் எம்பெருமானுடைய அடியும் முடியும் அறியமாட்டார் ;கீற்றுக்களையுடைய பாம்போடு , வன்னி , ஊமத்தை , பிறை சந்திரன்  என்பவைகளை , புரித்த புல்லிய சடையில் வைத்துள்ள எம் புனிதனாகிய எம்பெருமானை ஆர் அறிவார் ! அங்கையில் ஏந்துவதற்கு நெருப்பன்றி அவனுக்கு வேறு இல்லையோ !

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...