28 February 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


முழுதும் பழுதே புரிமூர்க்கன்
உலந்த போதின்
எழுதுங் கொடிபோல் பவருட்பட
ஏங்கு சுற்றம்
முழுதும் புலர்வுற் றதுமற்றவன்
அன்ன மாலைப்
பொழுதும் புலர்வுற் றதுசெங்கதிர்
மீது போத.

                - மூர்த்தி நாயனார்  (26)


பொருள்: முழுதும் தீய செயல்களையே செய்து வந்த மூர்க்கன் இறக்க, எழுதப் பெறும் கொடி போன்ற எழிலுடைய அவன் தேவியர் உட்பட, கவலையால் சுற்றம் முழுதும் வாடலுற்றனர். மற்று அக்கொடியவினைபோன்று மயங்குதற்குரிய இரவும், சிவந்த ஒளியையுடைய கதிரவன் வரக் கழிந்தது

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...