14 February 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பெருமான் பேரா னந்தத்துப்
பிரியா திருக்கப் பெற்றீர்காள்
அருமா லுற்றுப் பின்னைநீர்
அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவந்
திறந்த போதே சிவபுரத்துத்
திருமா லறியாத் திருப்புயங்கன்
திருத்தாள் சென்று சேர்வோமே.

                      -மாணிக்கவாசகர்  (8-45-8)


பொருள்: இறைவனது பேரின்பத்தில் பிரியாமல் மூழ்கி யிருக்கப் பெற்றவர்களே! நீங்கள் அருமையான மயக்கத்தில் பொருந்திப் பின்பு ஐயோ என்று, வருந்தி அலறாவண்ணம் அழகிய சிறந்த மணிகள் இழைக்கப் பெற்ற திருக்கதவு, திறந்திருக்கும் போதே, சிவபுரத்திலுள்ள, திருமாலறியாத, அழகிய பாம்பணிந்த பெருமானது திருவடியை நாம் சென்றடைவோம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...