22 February 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஞானவாள் ஏந்தும்ஐயர்
நாதப் பறையறைமின்
மானமா ஏறும்ஐயர்
மதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம்
அடையப் புகுமின்கள்
வானஊர் கொள்வோம்நாம்
மாயப்படை வாராமே. 

               -மாணிக்கவாசகர்  (8-46-1)

 

பொருள்: ஞானமாகிய வாளைத் தாங்கிய இறைவரது நாதப்பறையை முழக்குங்கள்! பெருமையாகிய குதிரையை ஏறுகின்ற இறைவனை அறிகின்ற அறிவு என்கிற வெண்குடையைக் கவியுங்கள்! திருநீறாகிய கவசத்திற்குள் புகுந்து கொள்ளுங்கள்! இவ்வண்ணம் செய்தால்  மாயப் படையை வென்று முத்தி உலகைக் கைக்கொள்ளலாம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...