10 February 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கன்றினார் புரங்கண் மூன்றுங் கனலெரி யாகச் சீறி
நின்றதோ ருருவந் தன்னா னீர்மையு நிறையுங் கொண்டு
ஒன்றியாங் குமையுந் தாமு மூர்பலி தேர்ந்து 
பின்னும்பன்றிப்பின் வேட ராகிப் பருப்பத நோக்கி னாரே.



                    - திருநாவுக்கரசர் (4-58-1)

பொருள்தம்மைவெகுண்ட பகைவர்களின் மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு கோபித்து , தாமும் பார்வதியுமாக இணைந்து ஊர்தோறும் பிச்சைக்காகத் திரிந்து நின்ற தம் வேடப் பாங்கால் பிச்சையிட வந்த மகளிரின் இயல்பையும் நிறை என்ற பண்பையும் கவர்ந்தவராய்ப் பின்னும் அருச்சுனனுக்கு உதவ வேண்டிப் பன்றிப் பின் வேடராய்ச் சென்றவருமாவார் . அப்பெருமான் திருப்பருப் பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...