09 November 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஆவின் நிரைக்குலம் அப்படி பல்க அளித்தென்றும்
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம்பேணும்
காவலர் தம்பெரு மானடி அன்புறு கானத்தின்
மேவு துளைக்கரு விக்குழல் வாசனை மேற்கொண்டார்.


              -ஆனாய நாயனார்  (12)


பொருள்: பசுக் கூட்டங்கள் இவ்வண்ணமே பெருகிடப் பேணிக் காத்து, இடையர் ஏவல் புரிந்திட, ஆயர்குலத்தைப் பேணி வரும் காவலர் பெருமானாய ஆனாயர், சிவபெருமான் திருவடி களில் பெருவிருப்புற்றுக் குழலில் இசை பொருந்த வாசித்து வரும் செயலை மேற்கொண்டார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...