29 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


எண்ணியநூற் பெருவண்ணம்
இடைவண்ணம் வனப்பென்னும்
வண்ணஇசை வகையெல்லாம்
மாதுரிய நாதத்தில்
நண்ணியபா ணியலும்
தூக்குநடை முதற்கதியில்
பண்ணமைய எழுமோசை
எம்மருங்கும் பரப்பினார்.

                     -ஆனாயநாயனார்  (27) 


பொருள்: இசைநூல்களில் அளவுபடுத்திய பெருவண்ணம்,- இடைவண்ணம், வனப்பு வண்ணம் எனும் இசைக்குரிய வண்ணங் களின் வகை எல்லாவற்றையும் சேர விளக்கிடும் பெரிய இனிய நாதத்தில் அமைந்த தாளமும், இசையும், தூக்கும், நடை முதலான கதிகளுடன், பண் அமைந்திடும்படி வரும் ஓசையை எப்பக்கங்களிலும் பரவச் செய்தார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...