21 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சேவடியில் தொடுதோலும்
செங்கையினில் வெண்கோலும்
மேவுமிசை வேய்ங்குழலும்
மிகவிளங்க வினைசெய்யும்
காவல்புரி வல்லாயர்
கன்றுடைஆன் நிரைசூழப்
பூவலர்தார்க் கோவலனார்
நிரைகாக்கப் புறம்போந்தார்.

                 -ஆனாய நாயனார் (18)


பொருள்: திருவடிகளிற் செருப்பாக தோலும், சிவந்த அழகுடைய கைகளிலே வெண்மை நிறமான கோலும், விளங்கிடும் இசையுடைய புல்லாங்குழலும் மிகு விளக்கம் செய்ய, அவரிடத்து ஏவல் புரிகின்ற வலிமையுடைய இடையர்களும், கன்றினை உடைய பசுக் கூட்டமும் சூழ்ந்திட, பூக்கள் மலர்கின்ற மாலையணிந்த கோவலனாராய ஆனாயர், பசுக்களின் நிரைகளை மேய்த்துக் காவல் கொள்ளும்படி வெளியே வந்தருளினார்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...