25 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மாலயன் வானவர் கோனும் வந்து
வணங்க அவர்க்கருள் செய்த ஈசன்
ஞாலமதனிடை வந்தி ழிந்து
நன்னெறி காட்டி நலம்திகழுங்
கோல மணியணி மாட நீடு
குலாவு மிடவை மடநல் லாட்குச்
சீல மிகக்கரு ணையளிக்குந்
திறமறி வார்எம் பிரானா வாரே. 

                    -மாணிக்கவாசகர்  (8-43-2)


பொருள்: மாலும் பிரமனும் இந்திரனும் வந்து வழிபட அவர்களுக்கு அருள்புரிந்த ஆண்டவன் உலகத்தின் கண்ணே வந்து தோன்றி நல்ல வழியினைக் காட்டி நன்மை விளங்குகின்ற அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்கள் நெடிது விளங்குகின்ற திருவிடை மருதூரில் இளம் பெண் ஒருத்திக்கு, ஒழுக்கம் விளங்கும்படி கருணைபுரிந்த தன்மையினை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவராவார்கள்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...