06 January 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று.
 
                   -மாணிக்கவாசகர்  (8-19-1)

 

பொருள்: அழகு பொருந்திய இளமையான கிளியே! எம்முடைய திருப்பெருந்துறை மன்னனது சிறப்புப் பொருந்திய திருப்பெயரைத் தூய தாமரை மலர் மேலிருக்கும் பிரமன், பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால், ஆகியோர் சொல்வதுபோல, திரு ஆரூரன்; சிவந்த திருமேனியையுடையவன்; எம்பிரான்; தேவர் பெருமான் என்று ஆராய்ந்து சொல்வாயாக.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...